Saturday 24 September 2011

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை



        பேரன்பு கொண்டவரே!
                      எனைப் பெற்ற தாய்மாரே!
                                உற்ற நட்பு முறையீரே!
                                         உளம் நிறையும் உடன் பிறப்பே!        

      நீங்கள் இட்டபணி அத்தனையும் இமைப்பொழுதில் முடிப்பதற்குக்
      காத்திருக்கும் என் வாழ்வை நீர் அறிவீர் ஊர் அறியும்
      தலை நகரத் தமிழர் மனம் மகிழ்ச்சியிலே திளைக்கும் வகை 
      தரமான பல நிகழ்ச்சி அளித்த எனை நன்கறிவீர்

      வான்புகழ் வள்ளுவரை வணங்கிட வசதியாய்ச் - சங்க  
      வாயிலிலே வைத்தவன் நான் வணங்கி உமை வேண்டுகிறேன்

      ஈவிரக்கம் ஏதுமற்றார் என் மீது கணைதொடுத்து
      வானுயரம் வசை சொன்னார்; பழிச் சொற்கள் பல உரைத்தார்

      கை எழுத்து மோசடி செய்தேன் என்றார்
      கல்விக் கழகத்தில் கலகம் செய்தேன் என்றார்
      அத்தனையும் பித்தலாட்டம்; அபாண்டமாய்ப் பொய்யுரைகள்
      அனைவருமே அறிவீர்கள் – என்றாலும் பதிலுரைப்பேன்

      வான் மழையாய் கார்முகிலாய் காமதேனுவாய் கற்பகத் தருவாய்
      நான் கேட்டால் துணைபுரிய பல நூறாய் நீர் இருக்க
      இல்லாதோர் கையொப்பம் எனக்கென்றும் தேவையுண்டோ?
      பொல்லாதோர் புனைசுருட்டை அறிந்திடுவீர் எனைக் காப்பீர்

     
      இரண்டாண்டு பணி புரிந்தும் ஊதியம் ஏதுமின்றி
      வாடி நின்ற ஆசிரியர் வாழ்க்கையிலே உவகையுற
      முதல்வரை நான் சந்தித்தேன் ஆசிரியர் துயர் முடித்தேன்
      அது பிழையா? என் தவறா? பிதற்றல் மொழி நீர் அறிவீர்

      கல்விக் கழகத்தின் நிதி நிலைமை சீரடைய
      கச்சிதமாய் அவர்பணிகள் மேன்மையுற வலிமையுற
      இலட்சம் ஆறு பெற்றளித்த பெருமைக்கு உரியவன் நான்
      இதை மறைத்துப் பொய்யுரைப்பார் கதை அறிவீர் எனைப் புரிவீர்

      கர்நாடக சங்கீதம் கச்சிதமாய் களைகட்ட
      இலட்சம் இருபத்தைந்து கிடைப்பதற்கு வழிவகுத்தேன்

      தனி நபராய் எனை நாடி வந்தவர்க்கும் நாள் தோறும்
      தட்டாமல் உதவுகிறேன் தலை நகர் முற்றும் அறியும்

      காட்சிக்கு எளியனாய் கடுஞ்சொல்லன் அல்லனாய்
      காலமெலாம் பொதுப் பணிக்கே அர்ப்பணித்து வாழுகிறேன்

      பொல்லாங்கு ஒருவரையும் சொன்னதும் இல்லை
      பொய்யுரைத்து புனைசுருட்டு பேசியதும் இல்லை
      எல்லாம் தெரிந்தவன் நான் என்றதும் இல்லை
      எவர்மனமும் நோகும்விதம் பேசுவதும் இல்லை.

      நல்லவர்கள் சொல்லும்மொழி அக்கறையாய் செவிமடுப்பேன்
      நாடிவரும் அனைவருக்கும் உதவிடநான் முனைந்துழைப்பேன்.
      பெரியவரின் பதம் பணிவேன், தோழருக்குத் தோள்கொடுப்பேன்
      தொண்டருக்குத் தொண்டனாவேன், துவளாமல் பணிநிறைப்பேன்

      சங்கத்தைச் சீரமைக்க சால பெரும் நிலை அடைய
      சான்றோரும் ஆன்றோரும் காட்டுகிற நல் வழியில்
      துடிப்போடு பணியாற்ற உம் ஆணை வேண்டுகிறோம்
      தூயவரே வாக்களிப்பீர் உம் வீட்டுப் பிள்ளைகள் யாம்


சங்கச் சீரமைப்பு அணிக்கே வாக்களிப்பீர்
சங்கம் சீர்பெறவே உதவிக்கரம் கொடுப்பீர்

                                                                                                                                                                          அன்புடன்
                                                                                    இராஜ கோபாலன் முகுந்தன்
                                                                                                                 உங்கள் வீட்டுப் பிள்ளை

1 comment:

K. hariharan said...

congrats to all on your mammoth victory. Best wishes for smooth and successful tenure.