Friday 23 September 2011

திரு பி. ராகவன் நாயுடு


இணைச்செயலர் வேட்பாளர்       -      வேட்பாளர் எண் 10
1984ஆம் ஆண்டு முதல் சங்கத்தின் உறுப்பினர். செயற்குழு உறுப்பினர், இணைப் பொருளாளர், இணைச் செயலர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர். இவர் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சங்கத்திற்கு தொண்டாற்றி வருபவர்.
1983-86 ஆண்டுகளில் சங்கத்தின் கலையரங்கக் கட்டிடம் உருவாகி வந்த காலகட்டத்தில் பலவிதங்களில் உதவியவர். குறிப்பாக, கலையரங்கின் முன்பகுதிக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்புச் சட்டங்களையும் கண்ணாடிகளையும் நன்கொடையாகப் பெற்றுத் தந்தவர். இதுதவிர, பலமுறை தானே நன்கொடை அளித்தது மட்டுமின்றி பலரிடமிருந்தும் நன்கொடை பெற்றுத் தந்தவர்.
இவர் ஒரு ஆன்மீக சீலர். ஆன்மீகப் பற்றினால் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன்மூலம் பகவான் பாபாவுக்கு ஆலயம் எழுப்பியுள்ளார். ஆண்டுதோறும் சிறப்பாக விழாவும் எடுத்து வருகிறார். கணிசமான தொகையின் மூலம் ரமண மகரிஷியின் பெயரில் அறக்கட்டளை நிறுவி, அதன்மூலம் ஆண்டுதோறும் சங்கத்தில் மகரிஷி விழா நடத்தி மகரிஷியின் மங்காத மகிமையைப் பரப்பி வருகிறார்.
விருந்தோம்பும் பண்பு இவரின் உடன்பிறந்தது. சங்கத்தில் மாலை நிகழ்ச்சிகள் முடிந்த பின் எண்ணற்ற முறை இரவு விருந்துகளை அளித்தவர். திரைப்படங்களின் இடைவேளையில் தேநீர் வழங்கும் ஏற்பாட்டை அறிமுகம் செய்தவரும் இவரே.
இவரது தமிழ்ப் பணி, பொதுப்பணி, சங்கப் பணி, ஆன்மீகப் பணிகளைப் பாராட்டும் முகமாக அண்மையில் தினமணி இதழில் வெளியான கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்கள்.
இவருடைய அறிமுகமும் நட்பும் மகிழ்ச்சி தரும் அனுபவம். இவரது தமிழ்ப்பணி மேலும் சிறப்பாகத் தொடரும் வகையில் சங்கத்தின் இணைச்செயலர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறோம்.
வழக்கறிஞர் திரு எம்.என். கிருஷ்ணமணி அவர்கள் தலைமையில்,
செயல்வீரர் முகுந்தனுக்கு துணை நின்று,
அன்புக்குரிய அறிவழகனுடன் கைகோர்த்துப்  போட்டியிடும்
திரு ராகவன் நாயுடு அவர்களுக்கும்
சங்கச் சீர்திருத்த அணி வேட்பாளர்களுக்கும் கீழ்க்கண்ட எண்களில்
வாக்களித்து வெற்றி தேடித்தருமாறு வேண்டுகிறோம்.
கிருஷ்ணமூர்த்தி                                                                       பி.ஆர். வேங்கடகிரி
உறுப்பினர் எண் 170                                             சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலர்

No comments: