Sunday 25 September 2011

அன்பு உள்ளங்களுக்கு நன்றி

அன்பார்ந்த சங்க உறுப்பினர்களே,
தமிழ்ச் சங்கத்துக்கான தேர்தலில் சங்கச் சீரமைப்பு அணிக்கு அமோக ஆதரவளித்த உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றி.
தலைவர் திரு கிருஷ்ணமணி, துணைத்தலைவர் திருமதி ரமாமணி சுந்தர், பொதுச் செயலர் திரு முகுந்தன், இணைச்செயலர்கள் திரு ராகவன், திருமதி கௌரி இளங்கோவன், பொருளாளர் திரு அறிவழகன், இணைப்பொருளாளர் திரு நரசிம்மமூர்த்தி ஆகிய அனைவரின் வெற்றியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
செயற்குழு உறுப்பினர்களிலும் நமது அணியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறும் நிலையில் இருக்க்கிறார்கள்.
வாக்கு விவரங்களை விவரமாக பின்னர் வலைப்பூவில் வெளியிடுவோம்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
வலைப்பூவில் நாளை விவரங்களைப் பார்க்க வேண்டுகிறோம்.

உங்கள் கருத்தறிந்து, மனமறிந்து சங்கச் செயல்பாடுகளை சீரமைப்போம்.
மீண்டும் நன்றி -
உங்கள் அன்புள்ள
சங்கச் சீரமைப்பு அணி

1 comment:

deiva... said...

சங்க சீரமைப்பு அணியின் அமோக வெற்றிக்கு உங்கள் வலைப்பூவின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
தங்களின் உண்மையான ஈடுபாடு வலிமையானது என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவித்துவிட்டன.

வெற்றி பெற்ற அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.

அன்புடன்
தெய்வசிகாமணி