Friday 30 September 2011

பாராட்ட வருக...


தில்லித் தமிழ்ச் சங்கத் தேர்தலில் சங்கச் சீரமைப்பு அணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி.

முந்தைய செயற்குழு தனது பொறுப்புகளை ஒப்படைக்கிற, புதிய செயற்குழு பொறுப்பேற்கிற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

புதிய செயற்குழு தனது முதல் நிகழ்ச்சியாக தேர்தல் அதிகாரிகளுக்குப் பாராட்டு விழாவை நடத்த உள்ளது. தேர்தல் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தில்லித் தமிழ்ச் சங்கம் நன்றிகளைத் தெரிவிக்கும் வகையில் நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வருமாறு அணியின் சார்பில் அன்புடன் வேண்டுகிறோம்.

தேர்தல் அதிகாரி திரு விஜய் ராஜ்மோகன்
துணை தேர்தல் அதிகாரி திரு கனகசபேசன்
துணை தேர்தல் அதிகாரி திரு கோவிந்தராஜுலு
மற்றும் தேர்தல் பணிகளில் உதவி செய்தவர்களுக்கு
பாராட்டு விழா

1-10-2011 சனிக்கிழமை மாலை 6.30 மணி
திருவள்ளுவர் கலையரங்கம்
தில்லித் தமிழ்ச் சங்கம்

விழாவைத் தொடர்ந்து இரவு விருந்து

பி.கு. - இது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அறிவிப்பு அல்ல. தேர்தல் நேரத்தில் இந்த வலைப்பூ வழியாக கருத்துகளை வெளியிட்ட ஆதரவாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த வலைப்பூவில் வெளியிடப்படுகிறது.

No comments: